பக்கம்:தொல்காப்பியம் பொருளியல் உரைவளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

தொல் காப்பியப் பொருளதிகாரத்தின் ஐந்தாவதாக அமைந்தது பொருளியல் என்பதாகும். இவ்வியலுக்கு இளம்பூரண குரையும் நச்சினார்க் கினியருரையும் என இரண்டுரைகளேயுள் ளன. இவ்வுரைகள் இரண்டும் சூத்திரந்தோறும் இள ம்பூரண ருரை முதலாவதாகவும் நச்சினார்க் கினியருரை இரண்டாவ தாகவும் கால அடைவினையொட்டி அமைக்கப்பெற்றன. இவ் வுரைகளைப் பயில் வார்க்கு உறுதுணையாக இன்றியமையா த் உரை விளக்கங்கள் அவ்வவ்வுரைகளின் கீழ் அடிக் குறிப்பாக தி தரப்பெற்றன. சூத்திரந்தோறும் அமைந்த இவ்வுரைகளின் பின் தொல் காப்பிய மூலத்தை அடியொற்றிச் சூத்திரத்தின் கருத் தும் பொருளும் விளங்க எளிய தமிழ் நடையில் ஆய்வுரைப் பகுதி எழுதிச் சேர்க்கப்பெற்றுள்ளது. பொருளியலுக்கு அமைந்த இரண்டுரைகளிலும் உரையாசிரியர்கள் காட்டிய உதாரணச் செய்யுட்களிற் பெரும்பாலன தொல்காப்பிய இலக்கண விதிகளை உள்ளவாறறிதற்குத் துணை செய்யும் இலக்கியங்களாகத் திகழ் தலின் அவை உரைகளிற் கண்ட வண்ணமே முழு வுருவில் வெளியிடப் பெற்றுள்ளன: முன்னைய இயல்களிற் போலவே இவ்வியலிலும் சூத்திர எண்களும் பக்க எண்களும் தமிழெ ண் அளாகவே அமைக்கப்பெற்றது.

பதிப்புத் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்