பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

壽魏。 தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

(2) இனி, ஆற்றாத் தனிமையிலழியும் தலைமகள் தனியை தாங்கா உளத்தளாதலின், உவப்பிற்குரியவும் உவர்ப்பாளாகித்” திளைப்பு வினைகளை வெறுப்ப தியல்பாம். அதனால் அத்

நிலை குறிக்கப்பெற்றது.

'பாலும் உண்ணாள்' எனும் கயமனார் குறும்பாட்டில், 'பத்துடன் மேவாள், விளையாட்டாயமொடு அயர்வோள்' என, அன்புற்றழிபவள் முன்பு திளைத்தவற்றை வெறுக்குங் குறிப்பு விளக்கப்படுதல் காண்க.

(3) இனி, கரந்திடத் தொழிதலாவது, சுரந்தெழு காதலைக் கரத்தழிதலைவி தனிமையில் வினையெலாம் தவிர்தலைச் சுட்டும்.

"யாமெங் காதலர்க் காணே மாயிற்

செறிதுணி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுதுரை போல மெல்ல மெல்ல வில்லா குதுமே.' (குறுந் , 290)

'யாவது மறிகிலர் கழறு வோரே,

தாயில் முட்டை போல வுட்கிடந்து சாயின் அல்லது பிறிதெவ னுடைத்தோ யாமைப் பார்ப்பி னன்ன காமங் காதலர் கையற விடினே." (குறுந் 132)

என வரும் செய்யுளடிகளில் கரந்திடத்தொழிதல்கண்டு தெளிக. இனித் தலைவன் தற்காணவும் தான் அவற் காணவும் விரும்பு வதே தண் டாக்காதற் பெண்டிரியல்பாதலின், அவ்வியல்புக்கு மாறாகவும் ஒழிதற் சொற்பொருட் கொவ்வாதாகவு மிதற்குப் பிறர் கூறுமுரை பொருந்தாமை தெரிந்து விலக்குக.

(4) இனி, இவ்வாறு தனிப்படரால் மெலிபவள் தான் முயலாது தலைவனைக்கான நேரின் மகிழ்வாள். அதனால் 'கண்ட வழி யுவத்தல் இங்குக் கூறப்பட்டது. இதிற் கூறிய நான்கும் தலைமகளின் கடக்கொனாக் காதலின் அறிகுறியாய் அமைதலின், இவை பொருந்திய நான்கெனக் குறிக்கப் பெற்றன.

SSAAAAS SAAAAAS AAASASASS

{1} 'உவப்பிற்குரியவும் உவர்ப்பாளாகி' என்றது, "உவகைக்குரிய புணர்ச்சி முதலியவற்றையும் வெறுப்பான கி என்பதாம், உவர்த்தல் , வெறுத்தல்.