பக்கம்:தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் உரைவளம்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీశ్రి : தொல்காப்பியம் - மெய்ப்பாட்டியல்

துஞ்சிச் சேர்தலாவது, வரைவுநீட்டுந் தலைவன் கூட்டம் மகிழாது தலைவி மனமாழ்கல். சோர்தல் என்னாது சேர்தல் என்றதானும், துஞ்சலும் மடிமையு முன் "ஆங்கவை ஒரு பாலாக' எனும் சூத்திரத்துத் தனி வேறு கூறப்படுவதானும் இங்கு இத்தொடர் வாளா மடிந்து மனை வைகுதலைச் சுட்டா மல், வரையா தொழுகுந் தலைவன் வரவு மகிழாது அவன் ஒழுக் கினுக்கு மாழ்கிப் பொலிவழி தலைவியின் மெலிவைக் குறிக்கும். "துஞ்சல் மடிமையாகாமை, 'நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்' என்று அவை வெவ்வேறு கூறப்பெறுதலானு மறிக. இதுவே பேராசிரியர்க்கும் கருத்தாதல், வேண்டியவாறு கூட்டம் நிகழப்பெறாமையின், தலைமகனொடு புலந்தாள் போல மடிந் தொன்றுமாதலின்' என்னு மவர் உரைக்குறிப்பால் உணர்க

இனி, "இஃது உரிமைபூண்டமையால் உறக்கம் நிகழ்தலா மாறும்’ எனும் இளம்பூரணர் கூற்றுப் பொருந்தாமை தேற்றம். இவ்வாறு துஞ்சிச்சேரு முள நிலையை,

  1. &

கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇ யொழுகும் என்னைக்குப் பரியலென் மன்யான் பண்டொரு காலே'

(குறுந் 203) என்பதில் முன் தலைவற்குப் பரிந்தேன்; அது கழிந்தது' எனத் தலைவி கூறுங் குறிப்பானும் காண்க.

காதல் கைம்மிசுலுக்குச் செய்யுள் : -

ஆர்கலி வெற்பன் வருதொறும் வரூஉம் அகலினும் அகலா தாகி இகலுந் தோழிநங் காமத்துப் பகையே'

(குறுந் 257)

'உள்ளின் உள்ளம் வேமே, யுள்ளா

திருப்பினெம் மளவைத் தன்றே, வருத்தி வான்றோய் வற்றே காமம், சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே' (குறுந் 102)