பக்கம்:தொல்காப்பியம் வரலாறு.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் 2 15 செய்தாரென்றுணர்க” என வரும் நச்சிர்ைக்கினிய ருரைப்பகுதி இங்கு நினைக்கத் தகுவதாகும் அடிகளின் பாகுபாட்டினை நன்குணர்ந்தோர் நாற்சீரடிகளை விரித்தாற் போன்று ஐஞ்சீரடி முதலாக வரும் ஏனையடிகளையும் பெருக்கிக் கானுமிடத்து அவை வரம்பிலவாம் என்பர் தொல் காப்பியர். அஃதாவது நாற்சீரடி அறுநூற்றிருபத்தைந்தொடும் ஐந்தாம் சீராக ஐஞ்சீரையும் உறழ 3125 விகற்பமாம். அவற் றுடன் ஆருஞ்சீராக ஐஞ்சீரையும் உறழ 15625 விகற்பமாம் அவற்றுடன் ஏழாஞ் சீராக ஐஞ்சீரையும் உறழ 78125 விகற்பமாம். இவ்வகையில்ை உறழ வரம்பிலவாய் விரியும். அன்றியும் இச் சொல்லப்பட்ட அடியினை அசையானும் எழுத்தானும் விரிக்க வரம்பிலவாம் என்பர் இளம்பூரணர்: பதினேழ் நிலத்தனவாக மேல் வகுக்கப்பட்ட ஐவகையடியும் ஆசிரியப்பாவிற்கு உரியன. அவை தனித்தனியுரியதாகி வரு தலே பன்றி விரவிவரினும் விலக்கப்படுதலில்லை யென்பர் ஆசிரியர். குறளடி யேர்ந்து சென்று சார்ந்து சார்ந்து 4-6 தேர்ந்து தேர்ந்து முசி நேர்ந்து வண்டு சூழ விண்டு வீங்கி சிந்தடி நீர்வாய் கொண்டு நீண்ட நீல 7-9. முன்வா யூதை வீச ஆர்வாய் மணியேர் நுண்டோ டொல்கி மாலை நேரடி நன்மணங் கமழும் பன்னெல் லூர 10-14 வமையேர் மென்ருே ளம்பரி நெடுங்க ணிணையி ரோதி யேந்திள வனமுலை யிறும்பமன் மலரிடை யெழுந்த மாவி னறுந்தழை துயல்வருஉஞ் செறிந்தேந் தல்கு