பக்கம்:தொல்காப்பிய ஆராய்ச்சி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொல் 119 கின்றார். அப்பொருள் நிலை, முன்னுள்ள சொல் லிலும், பின்னுள்ள சொல்லிலும், இரு சொற்களிலும். இரு சொற்கு அப்பாலும் நிற்கும் என வரையறுத்துக் கூறுகின்றார். சொற்களுள் சில பொருளுணர்த்தும் மரபினையும் புதிய சொற்கள் அவ்வப்போது படைத்துக்கொள்ளப் படலாமெனவும், வழங்கும் சொற்களையே உருக் குறைத்து வழங்குதல் உண்டெனவும், சொல்லுக் குரிய பொருளென்ற குறிப்பால் வேறு பொருள் பெறப்படுதல் உண்டெனவும், ஒரு பொருள் தரும் இரு சொற்களைச் சேர்த்துக் கூறல் இயல்பெனவும் வழக்காற்றில் சொல் பயனுறும் முறையைத் தெள் ளிதின் விளக்குவதனால் ஆசிரியர் மொழி நூற்புலவ ராகவும் விளங்குகின்றார். மொழி என்பது மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் கருவி: அக்கருவி வழக்காற்றி னுள்ளும் செய்யுளுள்ளும் எவ்வாறு பயன்பட்டு வருகின்றது என்பதனைப் பதினெட்டு இயல்களால் ஆராய்ந்து கூறியுள்ள சிறப்பு வேறு எம்மொழிக்கும் இல்லாத ஒன்றாகும்.