பக்கம்:தொல்காப்பிய மூலம்-பாட வேறுபாடுகள்-ஆழ்நோக்காய்வு.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J75 சாற்றுதிரி சிரபுரம்வாழ் வீரரா - கவப்புனிதன் தந்த மைந்தன் தேற்றுதிறற் சோடசம்சார் அவதானி என்னும்ஒரு சிறப்புப் பேர்பூண்டு) ஆற்றுபல கலையும்.உணர்ந் தமைக்கேற்ப நல்லொழுக்கத்(து) அமைந்து நிற்போன் ஈற்றுமுதற் சிவபெருமான் திருவடிக்கே கசிந்துருகும் இதையம் உள்ளோன் துன்னுசிவ னடியவரை அவன் எனக் கண்டு) அடிபேணும் துணிபே உள்ளோன் மன்னுநய குணசீலன் சுப்பரா - யப்புலமை வல்லோன் தன்னால் பன்னுபல பிரதிகொடு வரைகுநர்செய் பிழைஅனைத்தும் பாற ஆய்வித்(து) உன்னும்எழு தானழுத்தின் இயைவித்துப் பெருஞ்சீர்த்தி உற்றான் அன்றே. 2. கும்பகோணம் கல்லூரித் தமிழாசிரியர் தியாகராச செட்டியார் அவர்கள் இயற்றிய(து) மாமேவு மணிமன்றுள் நடம்நவிலும் புராணன்அருள் வாரி தோய்ந்து நாம்மேவு கடல்பருகி வரைஅழுத்தி அரிஉருவை நயந்து போற்றும் துமேவு சிவக்குறியாப் புரிந்துமணம் கான்றுதென்றல் தோன்று சந்தக் காமேவு மலையம்அமர் செந்தமிழா - சிரியன்பால் கற்ற மேலோர் பன்னிருவர் தம்முள்உயர் வளைபலவற் - றினும்மேன்மை படைத்த பாஞ்ச சன்னியமே எனவிளங்கு சால்புடையோன் உயர்சமதக் கினிதன் மைந்தன்