பக்கம்:தொழில் வளம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மின்சாரமும் தொழில்வளமும்

237



மளவு காட்டு உபயோகத்தில் பயன்படுத்தப் படுகிறது. நாட்டுத்தொழில் உலைக்கும் வீட்டு அரிசி உலைக்கும் மின்சாரம் பயன்படுகிறது. சர்க்கரையை அடுப்பில் பாகாக்குவதற்கும் பேருலையில் இரும்பை நீராக்கு வதற்கும் மின்சாரம் பயன்படுகிறது. சூட்டுக்கிடையில் தண்மை காண்பதற்கும் தண்மைக்கிடையில் வெப்பம் விளைப்பதற்கும். மின்சாரம் பயன்படுகிறது. இரவைப் பகலாக்குவதற்கும் இல்லாக் காற்றை அள்ளித் தெளிப் பதற்கும் மின்சாரம் பயன்படுகிறது. இப்படியே போக்குவரத்துக்கும் பொழுதுபோக்குக்கும் உதவும் வானொலி கேட்பதற்கும் மின்சாரம் பயன்படுகிறது. வீட்டைத் துப்புரவு செய்தற்கும் முகத்தை அழகு செய் வதற்கும்கூட மின்சாரம் தேவை என்ற நிலையில் நாடு முன்னேறுகிறது. இப்படி எடுத்ததற்கெல்லாம் மின்சாரம், உலகில் இடம்பெற்று, இது மின்சார யுகம் என்று வரலாற்றாளர் கூறும்வகையில் தன் ஆட்சியைப் ‘பார்க்குமிடமெங்கு மொரு நீக்கமறச் செலுத்துகிறது. அதன் பயனைத் தமிழ்நாட்டு மக்களும் பிறநாட்டாருக்குச் சளைக்கா வகையில் துய்த்து வாழும் வழியில் முன்னேற்றம் பெற்றே வருகிறார்கள். அவர் தம் முயற்சி வெல்வதாக என வாழ்த்துகின்றேன்.

இந்திய நாட்டில மின்சாரம் பல ஆண்டுகளாகவே வழக்கத்தில் உள்ளது. சிறந்த தொழில்வளம் மிக்க பம்பாய் மேற்கு வங்காளமாகிய இரு பகுதிகளாலும் தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் பெருமளவில் பயனபட்டு வருகின்றது. தமிழ்நாடு அந்த இரு மாநிலங்களுக்கு அடுத்த நிலையில் மூன்றாவதாக மின்சாரத்தை உற்பத்திசெய்து பயன்படுத்தி வருகின்றது. தொழிலுக்கு மின்சாரம்,உபயோகிப்பதில் நாம் மூன்றாவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/240&oldid=1382298" இலிருந்து மீள்விக்கப்பட்டது