பக்கம்:தொழில் வளம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

294

தொழில் வளம்


நிலையிலும் நடைபெற்றுத் தொழில் வளத்தையும் பெருக்குகின்றது.

இனி, இவ்வாணிபத் துறையில் சிறக்கவும், நல்ல வாணிப வளனால் நாட்டுச் செல்வம் செழிக்கவும் உள்ள வழித் துறைகளை ஆராய்ந்து காணல் நலமாகும். இன்று நாட்டில் ஒரே பொருளைப் பலரும் உற்பத்தி செய்கின்றனர், அத்தகைய பொருள்கள் மக்கள் வாங்கும் சந்தைக்கு வந்து குவிகின்றன. ஒரே வகையான பொருளுக்கு விலையில் ஏற்றத் தாழ்வு இருக்கக் காண்கின்றாேம். ஒரு சிலர் குறைந்த விலையிலுள்ள பொருள்களை வாங்கிச் செல்லுகிறார்கள். ஆனால் அவற்றைப் பயன்படுத்திய பின் அதன் தரக் குறைவைக் கண்டு அதை வாங்க யாரும் அஞ்சுவர். அவர்களை அதே பொருளை அடுத்த முறை வாங்கும்போது உயர்ந்த விலை கொடுத்து நல்ல பொருளையே வாங்கிச் செல்வர். இன்றும் சில பொருள்களை வாங்கும்போது உயர்ந்த விலையாக இருந்தாலும் நல்ல பொருளே வேண்டுமென்று கேட்பதைச் சந்தைகளில் காண்கின்றாேம். எனவே வாணிபத்தில் குறைந்த விலையில் விற்பனைப் பொருள்களைத் தயாரித்தோம் என்பதைக் காட்டிலும் சிறந்த பொருள்களைத் தயாரித்துச் சரியான விலைக்கு விற்றாேம் எனக் கூறுதல் பெருமைதரும். நன்றாகவும் பொருளைத் தயாரித்துக் குறைந்த விலக்கும் தருவதாயின் வாங்குவோர் இரட்டை மகிழ்ச்சி அடைவர். அவர்கள் வாணிபமும் பெருகும் என்பதில் ஐயமில்லை. ஒருவேளை அவருக்கு ஒவ்வொரு பொருளின் மேலும் வரும் இலாபம் சிறிய அளவினதாக இருந்தாலும் விற்பனை எண்ணிக்கை பெருகுகின்ற காரணத்தால் நாளாவட்டத்தில் அதிக லாபம் பெற வாய்ப்பு உண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தொழில்_வளம்.pdf/297&oldid=1381808" இலிருந்து மீள்விக்கப்பட்டது