இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6
வகையில் ‘தொழில் வளம்’ என்ற நூல் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.
நூலாசிரியர் திரு. அ. மு. பரமசிவானந்தம் அவர்கள் தமிழ்ப் பேராசிரியர்; பல இலக்கிய ஆராய்ச்சி நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர். அவர் நாட்டில் தொழிலியல், பொருளாதார அமைப்பு, முன்னேற்றம் முதலியவற்றைப் பற்றி நூல் எழுத முன்வந்தது பாராட்டத் தக்கதாகும். பல இடங்களில் ஆசிரியர் தெரிவித்துள்ள ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை அவரது சொந்தக் கருத்துக்களாகக் கொள்ள வேண்டும். மேலும், அபிவிருத்தித் திட்டங்களைப் பற்றிய குறிப்புக்களில் சமீப காலப் புள்ளி விவரங்கள் இடம் பெற்றிருந்தால் நூல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இத்தகைய ஆக்கப் பணிகளில் நூலாசிரியர் தொடர்ந்து ஈடுபடும் வகையில், நூலுக்குத் தமிழ் மக்களின் பேராதரவு கிடைக்க எனது நல்வாழ்த்துக்கள்.
செயின் ஜார்ஜ் கோட்டை சென்னை 9 19-2-1964 |
அன்புடன் எம். பக்தவச்சலம் |