பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 ★ வல்லிக்கண்ணன்

மணி ஓடியிருந்தது.

நமசிவாயம், “அட, நான் வந்து ரொம்ப நேரமாயிட்டுதே! கீழ ரதவீதியிலே ஒருவரைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தேன். நான் வர்றேன்’ என்று கூறி அவசரமாக விடை பெற்றுச் சென்றார்.

தமது விவாதத் திறமையையும், தம்முடைய கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துச் சொன்னதையும் எண்ணி மகிழ்ந்து போனார் சுந்தரமூர்த்தி. சட்டென அவர் மூளையில் ஒரு அதிர்வு ஏற்பட்டது.

நமசிவாயம் எதுக்காகவோ வந்தேன்னு சொன்னாரே ஆங், கடன் பணத்தை வட்டியோடு திருப்பித் தர வந்தேன்னார்... அடடா, பணத்தை அவர் கொடுக்கவே இல்லையே...

அவர் உள்ளத்தில் ஒரு உளைச்சல்...

‘அடடா, பண விஷயம் மறந்தே போச்சே, இனிமே அவர் எப்ப வருவாரோ, அல்லது வராமலே போயிடுவாரோ?

உண்மையாகவே அவர் வருத்தப்பட்டார். பணம் இனி திரும்பக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற வருத்தத்துக்கு மேலாக ஒரு உறுத்தல் அவருக்கு.

—இது தெரிந்ததும் மீனாட்சி பிடிபிடின்னு பிடிச்சு சரியான கொடை கொடுப்பா. அவளுக்கு ரொம்பக் கோபம் வரத்தான் செய்யும்.

நீண்ட பெருமூச்செறிந்தார் சுந்தரமூர்த்தி