பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்71

 முதலாளி ஐயாவின் உள்ளத்தில் மனிதத் தன்மை இருந்தால்தானே? அவர் பூஜிக்கிற பணத்தின் ஆத்மா தானே அவருடைய ஆன்மாவும்? ஆகவே, அவர் விறைப்பாக வண்டியின் பின்னாலேயே நடந்தார். உழைத்துச் செத்தவர்களின் உரிமை உணர்வற்ற இதயங்களை நசுக்கிச் செல்வது போல் வண்டியின் சக்கரங்கள் கடகடத்து உருண்டன.

“ஏ பழிகாரா! நீ விளங்குவாயா? உன் பெண்டாட்டி பிள்ளைகள் நாசமாய்ப் போக! என்ற வயிற்றெரிச்சலோடு ஏசியபடி, மண்ணை வாரி இறைத்துக் கொண்டிருந்தாள் பார்வதி. அந்த மண் அவள் மீதும், அவள் குழந்தைகள் தலையிலும்தான் விழுந்தது.

அன்றைய நாளைப் பொன்னாளாக மாற்றிவிட்ட பெருமையோடு, மிடுக்கோடு, பணம் தந்த பலத்தோடு' நிமிர்ந்து நடந்தார் பிறவிப் பெருமாள். பிறரைப் பற்றிய கவலை அவருக்கு என்றுமே கிடையாதே!

தாமரை