பக்கம்:த்வனி-சிறுகதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4& லா.ச. ராமாமிருதம்

எல்லாம் ராஜு பிறந்த ராசி என்று ராதை வருவோர் போவோரிடம் பெருமையடித்துக்கொள்கிறாள். அப்பவே என் தகுதிக்கு என் உரிமையைக்கூட என்னிடமிருந்து ராஜூவின் பிறந்த ராசி மூலம் பறிக்க ஆரம்பித்தாகி விட்டது. ஆனால் அப்போது அப்படிப்படுகிறதா ? நானும் அந்தப் பெருமையில் கலந்து கொள்கிறேன்.

மாலை ஆபீஸிலிருந்து வந்ததும், ராதை ஒரு மூட்டையை ஏந்தி வந்து என் கையில் திணிக்கிறாள். ஸோப்பு நுரைபோல் குழந்தையின் பால் சதை என் மேல் வாய்வர்ை எழும்பி, என் அணைத்த கைகளை நிறைத்து வழிகின்றது.

"நாம் மூனுபேரும் சேர்ந்து எப்போ போட்டோ எடுத்துக்கறது”என் முகத்துள் அண்ணாந்து பார்க்கும் ராதை முகமே ஆப்பிள் மாதிரிதான் இருக்கிறது.

சில நாட்களாகவே தொடர்ந்து நேர்ந்து கொண் டிருக்கும் இந்தச்சடங்கு எனக்கு இன்னும் அலுக்கவில்லை. ஆனால் ர்ாதையின் ஆசையை நிறைவேற்ற எனக்கு இன்னும் நேர்ம் கிடைக்கவில்லை. இன்றேனும் வீடு சேர்ந்ததும் ஒரு டாக்ளியை அமர்த்திக் கொண்டு

டெலிபோன் மண் அடித்தது.

'ஹல்ல்ோ?” "யார், மிஸ்டர் லாலிக்ராம்?” பெண் குரல். “Speaking.’’

அந்தப் பக்கத்திலிருந்து நீண்ட பெருமூச்செழுந்தது. "மிஸ்டர் ஸாவிக்ராம். excuse me. நீங்கள் ரொம்ப Galamauruśāśāsans, 2 Am I disturbing you ?”

"அப்படியொன்றுமில்லை. இன்னும் பத்து நிமிடங் களில் வீட்டுக்குக் கிளம்ப வேண்டியது தான்.”

'அப்போ, இந்தப் பத்து நிமிஷங்களும் நமக்கே சொந்தம்தானே!”

"நீங்கள் யார் என்று தெரியவில்லையே!” 'ஆ' கண்ணடி டம்ளர் அடியில் உருளும் கரையாத ஐஸ்கட்டி போல் அடக்கிய அவுட்டுச் சிரிப்பு.