பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம்

4

எல்லோரும் சனநாயக
எதிரிகளே எதிரிகளே.
அல்லாடும் மாந்தர்குலம்,
அழுதரற்றும் மன்பதைதான்!

உய்யும்வழி அணுப்போரை
ஒழிப்பதொன்றே என்பதனை
அய்யன்திரு நேருமகன்
ஆக்கமுறும் தாரகமாய்

நமக்கீந்த பேறாகும்!
நானிலத்தின்வேராகும்!
இமைபனிக்க அவன்நாமம்
ஏத்துகின்ற இந்நாளில்

உட்பகையும் வெளிப்பகையும்
உறுமுகின்ற இத்தருணம்
நட்பாடிக் கைகுலுக்கி
நடைமுறையில் அய்க்கியத்தில்

பெருங்குடும்பப் பிரஜைகளாய்ப்
பிரபஞ்சம் ஒன்றுபட்டால்
வரும் இன்னல் வென்றிட்டே
வலிவுற்றே பொலிவுறலாம்!