பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ.சண்முகம் அவனாகவே நாம்! ஆயிரம் கனவுகள் அவன்கா ணுகின்றான் ஆனால் ஒரு கரமும் அவனுக் கில்லை! நீயும் நானும் பெற்ற கரங்களே

நிஜமாய் அவனது நேர்த்திக் கரங்கள்! ஆனால் அவன் செயல் எதனையும் செய்ய நமது விரல்களை நாமசைப் பதில்லை!

ஆயிரம் செய்திகள் அவன்சொல்லத் துடிக்கிறான் ஆனால் ஒருகாலும் அவனுக் கில்லை. நடக்கும் கால்களை நகர்த்தலே இல்லை