பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

நடந்து காெண்டே இரு!



இரவின் இருட்டுப் புழுதியில்- `நேற்´றின்
எச்ச சொச்சம் நழுவட்டும்,
வரவுவைக்க `இன்றி´ தோ - உனது.
வாசல் கதவைத் தழுவுது!

சோம்பல்குறட்டைக் கணக்குகள்- நேற்றைய
சோடை வறட்டுப் பிணக்குகள்
ஆம்பல் வேரின் சகதியாய் - 'இன்றி'ன்
அடியில் சென்று மக்கட்டும்!

இன்று வந்தது 'இன்று' - என்றே
எக்களிப்பாய் நன்றே!
குன்றுவீடு போகும் - தங்கக்
குருவியும் எழுந்ததும் காண்பாய்!

சாமக்கோழி கூவுது! - நியதி
தர்மப்பாதை பாவுது!
சாமக்கோழிகள் கூவட்டும்! - புதுப்புது
தர்மப் பாதைகள் பரவட்டும்!