இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ந ந் தி வ ர் ம ன்
காட்சி 1.
இடம் : அரண்மனை கலைக்கூடம்.
காலம் முற்பகல்.
(சிற்பி ஒருவன் பல்லவர் ஆட்சிப் பெருமை கு றி த் து உற்சாகமாகப் பாடியவண்ணம், நடனமாதின் சிலை யொன்று செதுக்குகிருன்.
மாமன்னன் நந்திவர்மனும், மகா ராணி சங்காதேவியும் வருகின்றனர். பார்த்து மகிழ்ந்து நிற்கின்றனர்.)
சங்கா : (மகிழ்ந்து) வாழ்க நாட்டியக் கலை! வளர்க சிற்பக் கலை! நாட்டியமும், சிற்பமும் காத்து நல்லரசு நடாத்தும் பல்லவ மன்னர் வாழ்க!
சிற்பி : (பார்த்து வியந்து) ஆ! மன்னர் பெரு மான் ! வருக ! வருக ! மகாராணியார் வருக ! வருக!
வணக்கம், வணக்கம் !
கந்தி :- சிற்பியாரே! முடிந்தனவா நடனச்சிலையின் வேலைகள்?
சிற்பி : முடியுந் தருவாயில் இரு க் கி ற து! மாமன்ன! வரும் மதியத்திற்குள், முடித்து விடுவேன் !
கந்தி - நன்று, சங்க ! நீ பார்த்தனையா, இந்த நாட்டியச் சிற்பத்தை?