பக்கம்:நந்திவர்மன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

முல்லை :- கொண்டா இப்படி !

(அவள் கையிலிருந்த தூரிகையை வாங்கி, ஒவியக் கோடுகளின் கீழே “ சந்திர வர் மன்’ என்று எழுது

வித்தி :- (மகிழ்ந்து) அடி முல்லை! என் அந்தரங்க மனம் அறிந்தவள் நீ ஒருத்திதானடி என் சுவாமிக்கு இன்னும் என் எண்ணம் தெரியவில்லையே! அந்தப் பெயர் ! அதை ஒரு முறை வாயால் சொல்லடி சொல் !

முல்லை :- சந்திரவர்மன்!

வித்தி :- ஆஃகா சந்திரவர்மன் பெயரைக் கேட் டாலே என்னுள்ளம் பேரின்பம் கொள்ளுதடி சந்திர வர்மன் சந்திரவர்மன் !

(பச்சை புலவனும், மூட்டை முடிச்சு களோடு வெளியூரான் ஒருவனும் வருகின்றனர்.}

பச்சை : சந்திரவர்மன்... வித்தியாவதி அவுரு வல்லே! தோ! அவரது அந்தரங்க நண்பன் பச்சைப் புலவன் வந்திருக்கேன் !

வித்தி : அவர் வரமாட்டாரா ? வரவே மாட் டாரா என் இல்லத்திற்கு? (புதியவரைப் பார்த்து வியந்து) ஆங்! இவர் யார்? எந்த ஊர் ?

பச்சை: இவுரு ஒரு ஓவியக்கலைஞர்! காஞ்சியிலே கொஞ்ச நாளு தங்கி, ஒவியம் வரைஞ்சு மகாராஜா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/26&oldid=671975" இலிருந்து மீள்விக்கப்பட்டது