83
யங்கட்கு படைத்தலைவன் எல்லப்ப நம்பியோடு தொடர்பு கொள்ளவும்.
இங்ஙனம், பாண்டிய மன்னன்
சிவல்லப தேவன்.
துரோகம் அமைச்சரே ! மாபெரும் துரோகம் ! அண்ணனைக் கொல்வது; ஆட்சியைக் கைப்பற்றுவ தாம் ! எண்ணக் குலை நடுங்கும் ஈனத்தனம்! எப்படித் தான் துணிந்தார் ? அன்பு பெரிதென்றேன் அன்றாெரு நாள் : பரம்பரைக்கும் பங்கமென்றாரே சந்திரவர்மன் : பல்லவப் பரம்பரைக்கும் புகழ் சேர்க்கும் காரியமா இது? அடுக்குமா இந்த அநியாயம்? சந்திரவர்மன் பல்லவப் பெருங் குடியிலே ஒரு பாபி !
லோ : பேசிப் பயனில்லை மகாராணி! தொடங்கி விட்டது சூழ்ச்சிப் படலம்! வெல்ல வேண்டும் பகையை! வேரறுக்கவேண்டும் சதியை !
சங் - அதற்கு என்ன செய்யவேண்டும் மென்கிறீர்? சீலா :- தக்க நடவடிக்கைகளை இப்பொழுதே எடுக்க வேண்டும் வஞ்சகத்தை வாழவிடக் கூடாது ! காட்டிக் கொடுக்கும் கயவர்களைப் பூட்டிவைக்க வேண் டும் சிறைச் சாலையில்.
(ஒரு வீரன் வருகிருன்)
வீரன் :- வணக்கம் மகாராணி !
சங் :- என்ன செய்தி ?
வீரன் :- இளைய மகாராஜா தங்களைப் பார்க்க விரும்புகிரு.ர்.