பக்கம்:நன்னெறி நயவுரை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


எழுத்தறியார் கல்விப் பெருக்கம் அனைத்தும் எழுத்தறிவார்க் காணின் இலையாம்-எழுத்தறிவார் ஆயும் கடவுள் அவிர்சடைமுன் கண்டளவில் வீயும் சுரநீர் மிகை. ஆக்கும் அறிவா னலது பிறப்பினால் மீக்கொள் உயர்விழிவு வேண்டற்க-நீக்கு பவரார் அரவின் பருமணிகண் டென்றும் கவரார் கடலின் கடு, பகர்ச்சி மடவார் பயிலநோன் பாற்றல் திகழ்ச்சி தருநெஞ்சத் திட்பம்-நெகிழ்ச்சி பெறும்பூரிக் கின்றமுலைப் பேதாய் பலகால் எறும்பூரக் கல்குழியு மே. உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங்கீழ் கொண்டு புகல்வதவர் குற்றமே-வண்டுமலர்ச் சேக்கை விரும்பும் செழும்பொழில்வாய் வேம்பன்றோ காக்கை விரும்பும் கணி. கல்லா அறிவிற் கயவர்.பால் கற்றுணர்ந்த நல்லார் தமது கனம் நண்ணாரே-வில்லார் கணையிற் பொலியும் கருங்கண்ணாய் நொய்தாம் புணையிற் புகும்.ஒண் பொருள். 21 22 23 24 25