பக்கம்:நபிகள் நாயகம்-கி. ஆ. பெ. விசுவநாதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

5

முஹம்மது நபியவர்கள் இறுதி தீர்க்கத்தரிசி என்ற கொள்கை ஆகியவையும் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.

நூல் முழுவதிலும் ஆசிரியர் அவர்களுடைய நல்லெண்ணமும், சிரத்தையும், இஸ்லாத்திடத்தும், முஹம்மது நபியவர்களிடத்தும், முஸ்லிம்களிடத்தும் அவர்களுக்குள்ள விசுவாசமும், மிகத் தெளிவாகத் தெரிகின்றன. இத்தகைய நல்லெண்ணத்திற்காகவும், முஸ்லிம்கள் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.

இந்நூலில் சரித்திர ஆதாரமில்லாமல் கர்ண பரம்பரையாக வழங்கி வருகின்ற நிகழ்ச்சிகள் சிலவும், சில தவறுகளும் இடம் பெற்றிருக்கின்றன. சில அச்சுப் பிழைகளும் காணப்படுகின்றன. இவை அடுத்த பதிப்பில் தவிர்க்கப்படவேண்டும் என்பது என் நோக்கம். இப்பதிப்பிலும் அவை எடுத்துக் காட்டப் பெற்று, இந்நூலின் இறுதியியில் பிழை திருத்தம் என ஒரு குறிப்பும் வெளி வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆசிரியர் அவர்களுடைய இந்த முயற்சியும், பணியும் எல்லோருடைய போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரியன. இஸ்லாத்தைப் பற்றியும், நபிகள் நாயகமவர்களைப் பற்றியும் சாதாரண மக்களிடையே நிலவும் தவறான சில எண்ணங்களைத் திருத்தக்கூடிய கருத்துகளும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன. இத்தகைய கருத்துகளை அகமார்ந்த ஆர்வத்தோடு வெளியிட்டிருக்கும் திரு. கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களுக்கு என்னுடைய பாராட்டுதலையும், நன்றியையும், மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மு. மு இஸ்மாயில்
சென்னை-28
20-09-74