பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107



83. இருதரப்பிலும் அணிவகுப்பு

பெருமானார் அவர்கள், தங்கள் கருத்துக்கு மாறாக, பெரும்பான்மையானவர்களின் கருத்துக்கு ஏற்ப, வீட்டினுள் சென்று போர்க் கவசத்தை அணிந்து கொண்டு வெளியே வந்தார்கள்.

பெருமானார் அவர்கள் கருத்துக்கு மாறாகச் செய்யும்படி நம்மால் ஏற்பட்டுவிட்டதே என எல்லோரும் வருந்தி, அவர்களிடம், “எங்கள் அபிப்ராயத்தைக் கை விட்டு விடுகிறோம்” என்று கூறினார்கள்.

“இனித் திட்டத்தை மாற்றுவது அழகல்ல” என்று பெருமானார் கூறிவிட்டார்கள்.

***

தங்கள் படையுடன் குறைஷிகள் மதீனாவுக்கு இரண்டு மைல் தூரமுள்ள ‘உஹத்’ என்னும் குன்றின் அடிவாரத்தில், கூடாரம் அடித்துத் தங்கிவிட்டார்கள்.

***

ஹிஜ்ரீ மூன்றாவது வருடம் ஷவ்வால் மாதம் பத்தாம் தேதி வெள்ளிக்கிழமை, ஜூம்ஆத் தொழுகை முடிந்ததும், பெருமானார் அவர்கள் ஆயிரம் தோழர்களுடன் மதினா நகரை விட்டுப் புறப்பட்டார்கள்.

அப்துல்லாஹ் இப்னு உபை தம்மோடு முந்நூறு பேரைக் கொண்டு வந்திருந்தார். ஆனால் கொஞ்ச தூரம் சென்றதும், “பெருமானார் என் அபிப்பிராயப்படி நடத்தவில்லையே” என்று சொல்லித் தம்முடைய படையைத் திருப்பிக் கொண்டு போய் விட்டார்.

அப்பொழுது பெருமானாருடன் எழுநூறு வீரர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் நூறு பேர் மட்டுமே கவசம் அணிந்திருந்தனர்.

சிறுவர்களை எல்லாம் திரும்பிப் போகும் படி, பெருமானார் அவர்கள் கட்டளையிட்டார்கள்.

படைகள் உஹத் வந்து சேர்ந்ததும், உஹத் குன்றை, முஸ்லிம்களுக்குப் பின்புறமாக வைத்துப் படைகளை