பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1



யார்? எவர்?

நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்று நிகழ்ச்சிகளில் தொடர்புடையோர் எண்ணற்றோர். அவர்களில் சிலரைப் பற்றிய சிறு குறிப்புகளை இங்கே காணலாம். வாசகர்களுக்கு ஓரளவு பயன் தரும்.

அப்துல் முத்தலிப்-குறைஷித் தலைவர். ஹாஷிமுக்கும், யத்ரிபில் வர்த்தகம் செய்துகொண்டிருந்த ஸல்மாவுக்கும், கி.பி.497ல் மக்காவில் பிறந்தார்; யத்ரிபில் தம் தாயிடமே வளர்ந்தார். பின்னர், இஸ்மாயில் (அலை) அவர்களின் வில் அம்பும், கஃபாவின் திறவு கோலும் இவரிடம் ஒப்புவிக்கப்பட்டன. தண்ணீர்ப் பஞ்சத்தின் போது, கனவில் அறிவுறுத்தப்பட்டு, ஜம்ஜம் கிணற்றைத் தூர் எடுத்துத் தோண்டியவர். இவருக்கு மொத்தம் பதினான்கு ஆண் மக்களும், ஏழு பெண் மக்களும் பிறந்தனர். நபிகள் நாயகம் அவர்கள் தந்தை அப்துல்லாஹ், இவருடைய குமாரர்களில் ஒருவர். நாயகம் அவர்களை இளமையில் வளர்த்தவர் இவரே.

அப்துல்லாஹ்-இவர் நாயகம் அவர்களின் தந்தை. இவரும் ஸுபைரும், அபுதாலிபும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள். இவர் கி.பி.545-வது ஆண்டில் பிறந்தவர்.

அப்துல்லாஹ் இப்னு உபை-மதீனாவில் கஸ்ரஜ் கோத்திரத்தைச் சேர்ந்தவர். ஒளஸ்களுக்கும் கஸ்ரஜ்களுக்கும் நிகழ்ந்த புஆத் போரில் இவர் நடுநிலைமை வகித்தார். அதனால் இரு கட்சிகளிலும் இவருக்குச் செல்வாக்கு இருந்தது. இரு கட்சியினரும், இவரைத் தங்களுடைய அரசனாக முடிசூட்ட முயன்று தாமதமாயிற்று. நாயகம் அவர்கள் வந்த பின்னர், இவருடைய செல்வாக்கு மங்கத் தொடங்கியது. அதனால் அவர்கள் மீது வெறுப்புக் கொண்டார். வெளியில் காட்டிக் கொள்ளாமல் நட்புறவு போல் காட்டினார். பத்ருப் போருக்குப் பின் தம் நண்பர்களுடன் இஸ்லாத்தில் இணைந்தார். உஹத் போரில் ஒத்துழைக்காமல், துரோக சிந்தையால் பின் வாங்கி விட்டார். தபூக் போரில் மக்கள் சேராதவாறு