பக்கம்:நபிகள் நாயகம் வழியில்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 நபிகள் நாயகம் வழியில் 'இதுதான் சுல்தான் செய்யது இபுராஹிமின் இல்லம்' எனப் பாரசீக மொழியில் பதிவு செய்துள்ளார். 3) ஏர்வாடி சுல்தான் செய்யது இபுராஹிம் அவர்களது நினைவு நாளான துல்காயிதா பிறை 23 அன்று நடைபெறும் கந்தூரி விழாவில் இராமநாதபுரம் மன்னர்கள் கலந்து கொண்டு சுல்தான் அவர்களுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கம் அண்மைக் காலம் வரை இருந்து வந்தது. 4) ஏர்வாடிப் பகுதிக்கு முதன் முதலில் சுல்தான் செய்யது இபுராஹிம் அவர்கள் வந்தபொழுது அவர்களுக்கு உகந்தவர்களாக தொண்டு செய்து வந்த இடைக்குடி மக்களின் வழியினர் இன்றும் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவின் 15 நாட்களும் தர்ஹாவின் நிகழ்ச்சிகளில் உணர்வுப் பூர்வமாகப் பங்கெடுத்துக் கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக