பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


நல்ல செல்வம் என்பது அடுத்தவரை நேசிப்பதும், அவர்களால் நேசிக்கப் படுவதும்தான். இலட்சியவாதிகளுக்கு இந்தச் செல்வம் நிறையவே கிடைக்கும்.

நல்ல செல்வத்தை எப்படிப் பயன்படுத்துவது? புத்திசாலித் தனமாக, வாழ்க்கைப் பயணத்தில் மகிழ்ச்சி செல்வத்தை அடைய மாறாத புத்திசாலித்தனம் தான் வேண்டும். அதற்கு வரும் முடிவுகளுக்கேற்ப வாழ்ந்து கொண்டாக வேண்டும். வளைவுகளில் வளைந்து நெளிந்து செல்லும் வாகனம்தான் பத்திரமாகப் போய்ச் சேருகிறது.

நமது பத்திரத்திற்கும், பாதுகாப்பான வாழ்வுக்கும் நமக்கு நாமே துணை. நமக்கு நாமே உதவிக் கொள்வோம். உலகை வெல்வோம் என்று பயணத்தைத் தொடங்குவோமே!