பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

75


கொண்டிருக்கிறோமே யொழிய. களிக்க நாம் தயாராக இல்லை.

நாம் ஒரு சில இடங்களுக்கு அங்குமிங்கும் போய் வருகிறோம் என்பதாலேயே நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பலர் எண்ணித் திருப்திப்பட்டுக் கொண்டு விடுகின்றார்கள்.

நாம் செய்யும் செயல்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும் வளர்ச்சி என்று சொல்லி விட முடியாது. நமது எல்லா இயக்கங்களும் முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன என்றும் கூறிவிட முடியாது.

நாம் என்ன செய்கிறோம் என்று அறிந்து செய்வதுதான் சாமர்த்தியம்.

ஒவ்வொரு காரியத்திலும் சங்கடங்கள், தடைகள் வரும். நேரும், அவற்றை சந்திப்பதிலும், சமாளிப்பதிலும், சரிகட்டுவதிலும், சாதிப்பதிலும் தான் சக்தியும் திறமையும் நிறைந்து கிடக்கின்றன.

நமக்கும் ஒரு காலம் நிச்சயம் வரும் என்று நம்பி உழைப்பது அறிவாளியின் செயலாகும். நமக்கும் ஒரு காலம் வரும் என்று நம்பிக்கிடப்பது முட்டாள்களின் பண்பாகும்.

சாமர்த்தியத்திற்கு ஓர் இலட்சியம் உண்டு. அது சக்தியை சரியான வழியில் பயன்படுத்தி, முன்னேற்றப் பாதையில் நடத்தி விடுவதுதான்.