உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நமது நிலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 கிடைக்காவிட்டால் நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தை விட்டுவிடுவதா?" என்று கூடக் கேட்டார்கள். பிறகு 10 நாளைக்குள் சேலம் உருக்காலை கிடைத்துவிட்டது என்பதை நாம் மறந்துவிட முடியாது. பெண் கேட்டவர்கள் கதை. நாங்கள்தான் கேட்டோம், நாங்கள்தான் கேட்டோம் வெற்றியில் உங்களுக்குச் சொந்தமில்லை " என்று ஆகவே கூறுகிறார்கள். கேட்ட . ஒரு வீட்டில் அழகான பெண் இருக்கிறாள். பல பேர் போய்ப் பெண் கேட்கிறார்கள். பையன் பிடிக்கவில்லை. நல்ல வருமானம் இல்லை. நல்ல அழகு இல்லை என்று சொல்லித் தட்டிக்கழித்துவிட்டு, கடைசியில் அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகி, திருமண ஊர்வலம் வரும்பொழுது, பாதை ஓரத்தில் நின்றுகொண்டு “நான் பெண்தான் என்று கேலி செய்வதா? கட்டினவனுக்குத்தான் பெண்ணே தவிர,கேட்டவனுக்கெல்லாம் அல்ல என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதைப்போலத்தான் தி.மு.க. ஆட் சிக்கு வெற்றி கிடைத்தது. வெற்றியை நாங்கள் கொண் டாடுகிறோம். அனைவரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். ஆனால் வெற்றி கிடைத்த நேரத்தில், நாங்கள் தான் கேட்டோம், நாங்கள்தான் கேட்டோம்” என்று சொல் வதா ? 66 சேலம் உருக்காலைகுறித்து மேலும் ஒரு அறிக்கை தேவைதானா ? ஆராய்ச்சிகள் முடிந்து தானே அறிக்கை கொடுக்கப்பட்டது? மறுபடியும் அறிக்கை எதற்கு?" என்று குறிப்பிட்டார்கள். புது அறிக்கை பெரிய அறிக்கையாக இருக்காது, ஒரு திருத்த அறிக்கையாகவே இருக்கும். அது ஏன் தேவை? இந்த அறிக்கை வெளியாகி பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தொழிற்சாலை வராது என்ற நிலை யில் அறிக்கையை ஏறெடுத்துப் பார்க்காத சூழ்நிலை உருவாகி யிருந்தது. உருக்காலை வருகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டு, காலக் கடத்தல் காரணமாக, தாமதம் காரணமாக, அந்த அறிக்கையில் சில திருத்தங்கள் தேவைப்பட்டன. திருத்த அறிக்கையையும் ஆறுமாத காலத்தில் கொடுத்து, வேலையைத் தொடங்கிட வேண்டும் என்று வலி' யுறுத்திக் கூறுகிறோம். நல்ல சூழ்நிலை இருப்பதால், தேர்த லுக்குப் பின்னால் ஆட்சி மாற்றம், அமைச்சரவை மாற்றம். 109/1-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நமது_நிலை.pdf/17&oldid=1705332" இலிருந்து மீள்விக்கப்பட்டது