பக்கம்:நம் நேரு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நம் நேரு



தாய் தந்தையரை பிரிந்து தனியாக வாழ நேர்ந்தது அது தான் முதல் தடவையாகையால் நேருவுக்குக் கொஞ்ச காலம் சிரம்மாகத்தான் இருந்தது. எனினும் ஓயாத படிப்பும் விளையாட்டும் கொஞ்சம் கொஞ்சமாக வீட்டு நினைப்பை மறக்கடித்து விட்டன.

மாணவர்கள் மத்தியில் அவர் தனியன் போன்ற நிலையையே ஏற்பட்டது. அவர்களில் ஒருவராகப்பழகி விளையாடித் திறமையோடு மிளிரும் சுபாவம் அவரிடம் இருந்ததில்லை. அவர் விளையாட்டுகளில் கலந்து கொண்டாலும் சோய்ப்பதில்லை என்பதனால் மற்றவர்கள் அவரை ஒதுங்கி வாழ விட்டுவிட்டார்கள். இதர மாணவர்கள் சதா விளையாட்டுகளைப் பற்றியே பேசிமகிழ்ந்தார்கள். விளையாட்டுகளை விட்டால் அவர்கள் பேச்சுக்கு வேறு பொருளே கிடையாது. ஆனால் ஜவஹர் பள்ளிக்கூடப் பாடங்களில் மட்டுமின்றிப் பொது விஷயங்களிலும் நல்ல ஞானம் பெற்றிருந்தார். அவர் அதிகமான புத்தங்களும் பத்திரிக்கைகளும் வாசிப்பதில் அக்கறை காட்டி வந்தார். ஆகவே இதர மாணவர்கள் அவரது நோக்கிலே மந்த மதியினராகவே தோன்றினர். மேல்வகுப்புக்குச் செல்லச் செல்லத் தான் கூறிய அறிவுள்ளவர்கள் சிலரைக் காண முடிந்தது அவரால்.

அரசியல் விஷயங்களில் மாத்திரம் தான் நேருவின் கவனம் ஈடுபட்டிருந்தது என்றில்லை. ஆகாய யாத்திரை தொடங்க விமானங்கள் கட்டிப் பறக்க ஆரம்ப முயற்சிகள் நடந்து கொட்டிருந்தகாலம் அது. விமான வளர்ச்சியிலும், பறக்க முயன்ற தீரர்களின் பரிசோதனைகளைக் கவனிப்பதிலும் நேரு அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நம்_நேரு.pdf/29&oldid=1365045" இலிருந்து மீள்விக்கப்பட்டது