பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

வேண்டுகோள்

தலைவ, உன் அருளும், பாதுகாப்பும் எங்களுக்கு வேண்டும். மண்ணையும், விண்ணையும் ஆட்சிபுரிபவன் நீயே என்று அறிந்திருந்தும், கடலலைகளும், வான்முகில்களும் உன் ஆணைப்படியே நடக்கின்றன என்று தெரிந்திருந்தும், அடிக்கடி எங்களை அச்சமும் மனக் கசப்பும் பீடித்து வருத்துகின்றன. கொடிய ஆற்றல்கள் யாவும் எங்களிடம் பெருந்தன்மையுடனும் பரிவுடனும் நடந்து கொள்ள அருள் செய்க. தீமை ஏதும் எங்களுக்கு நேராமலிருக்கட்டும், என்றும் நாங்கள் வளர்ச்சியில் முன்னேற்றம் காண்போமாக. (யசுர் 36)

த.கோ - தி.யூரீ

$