பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

90

வண்ணஒளி வழங்கும் வானொளியே, ஆன்மிகத்தின் உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லுக. தன் பேரொளியினால் என் மனத்திற்கும் தெளிவான ஒளி சேர்ப்பாயாக. (அதர் 19)

தெய்வத் தீயே, தன்னொளி கொண்ட தனிமுதலே உடல், நலமும், ஆன்மிகச் செல்வமும் பெற்று மகிழ எங்களை அறநெறியில் வழி நடத்திச் செல்வாய், எதிர் திசையில் செல்லத் தூண்டும் தீவினைச் சிந்தனைகளிலிருந்து என்னைத் தடுத்து ஆட்கொள்வாய். என்றும் உன் புகழ் பாடிட அருள் செய்வாய்.

(யசுர் 11)

ஆற்றலின் ஊற்றிடமே, எங்களை இழி பிறவிகளாக்கி அறியாமைக்கு அடிபணியும் படுநோவுக்கு ஆளாக்காமலிருப்பாயாக, கட்டுக் கடங்காத அலைக்கும் பற்றுகளுக்கும், இழிவான அடிமைத் தன்த்திற்கும் எங்களை - - இட்டுச் செல்லாதிருப்பாயாக. (இருக் 3)