பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

146

இயற்கை அன்னை

இயற்கையின் ஒத்திசைவுடன் முழுமையாக ஒன்றி வாழ். உலகின் ஒப்பற்ற ஒளியில் - கடவுளின் எல்லையற்ற அன்பைக் காண்பாய். கடவுளின் அருளால் பெரும்பேறு பெறுவாய். இனிய உதய ஞாயிறு உன் உள்ளுயிர்க்கு இனிமை சேர்க்கட்டும். பளிச்சிடும் நடுப்பகல் உன் நெஞ்சத்தை மகிழ்ச்சியால் துள்ளச் செய்யட்டும். உன் ஆன்மாவின் பெருமிதமான இசை அமைதிக்கும் வளமைக்கும் வழி காட்டட்டும். உன் அன்றாடப் பணி முடிவு பெற்றபின் இயற்கை அன்னையின் மடியில் துயில் கொள்வாய். தேவர்கள் யாவரும் உனக்கு உறு துணையாக நிற்பார்கள். (யசுர் 34)

நற்றமிழில் நால் வேதம்