பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

{#* 154

அழிவுப் பாதையிலேயே செல். நான் பேசுவது கண்ணும் காதும் உள்ளவர்களிடம், பார்ப்பவர்கள், கேட்பவர்களிடமும் தான். இறைவனின் வாழ்த்துப் பெற்ற, அன்புள்ளம் கொண்ட, நுண்ணறிவுள்ள மக்கள் நம்மைச் சுற்றிலும் ஏராளமானவர் உள்ளனர். அவர்களுக்காகவே எழுப்பப்பட்டது இந்த மேட்டுநிலம், இறைவனின் அருள்பெற்று - அவர்கள் முழு வாழ்வு வாழட்டும். (அதர் 12)

மேலான வரம் அருளும் மூவுலகின் தாயின் தாள் பணிகிறோம், எங்கள் உடலினின்று நீங்கும் ஆன்மாவின் பிரிவு முழுமையான விடுதலைக்கு அடிவைப்பாகட்டும். காம்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் வெள்ளரிப் பழம் போல, இறப்பின் பிடியிலிருந்து எங்கள் ஆன்மாவை அவள் விடுவிக்கட்டும். எங்கள் இறப்பு இறவாமைக்குப் படிக்கல்லாகட்டும்.

(அதர் 14)

இறவாமையை அடைய முற்படும் நீ தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. இறைவனிடம் முழு ஈடுபாடும், முழுப் புகலடைவுமே இறவாமை என்ற நிலைக்கு உன்னை உயர்த்தும். இறப்பின்மையின் குழந்தையே நீ என்பதை நினைவு படுத்திக் கொள்வாய். (அதர் 15)

நற்றமிழில் நால் வேதம்