பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

2O6

வேதப் பேரறிஞர்கள் புரியும் வேள்வி மகிழ்ச்சியான இல்லற வரழ்க்கைக்கு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இறைவனுக்கு செலுத்தும் வழிபாடுகள் எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும். (யசுர் 8)

ஓர் உடன்பிறந்தான் மற்றோர் உடன்பிறந்தானை வெறுக்காமலிருக்கட்டும். - ஓர் உடன்பிறந்தாள் ம்ற்றோர் உடன்பிறந்தாளை வெறுக்காமலிருக்கட்டும். - ஓர் இணக்கத்தோடும், இனிமையுடனும் நீங்கள் யாவரும் பேசிப் பழகுவீர்களாக, ஒத்த மனமுடையவர்களாகவும், ஒருமித்த குரல் எழுப்புபவர்களாகவும் நீங்கள் அனைவரும் இருப்பீர்களாக. (அதர் 3)

பெரியோர்களுக்கு மதிப்பளியுங்கள். பெருந்தன்மையுள்ள நெஞ்சமுடையவர்களாக இருங்கள். பொதுவான இலக்கும், பொதுவான குறிக்கோளும் கொண்டு முன்னேறுவீர்களாக, ஒருவரிடமிருந்து ஒருவர் பிரிந்திராதீர்கள். ஒருவரிடம் ஒருவர்.இன்மொழிகளைப் பேசுங்கள். என்னிடம் நெருங்கி வாருங்கள். ஒருமித்த கருத்துகளும், ஒரே குறிக்கோளுமுடைய இணை பிரியாத தோழர்களாக உங்களை நான் பிணைத்து விடுகிறேன். (அதர் 3)

நற்றமிழில் நால் வேதம்