பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245

ஆனால் ஒன்றை மட்டும் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள். அன்பு செலுத்தினால் மட்டும் போதாது. தொடர்ந்த கடின உழைப்பும், தளராத ஊக்கமும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அப்பொழுதுதான் இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். (இருக் 4)

தன் முயற்சிகளினால் மட்டுமே ஒருவன் தனது குறிக்கோள்களில் வெற்றி பெறுகிறான். (இருக் 5)

உனது முழு வாழ்நாளையும் நன்கு வாழ்ந்து விடு. முதுமையை பெருந்தன்மையோடு வரவேற்றிடு. என்றும் நீ சுறுசுறுப்புடன் செயல்படுவாயாக ஒளிமிகு உலகைப்படைத்த இறைவன் உனக்கு நற்பேறு அளிக்கட்டும். (இருக் 10)

குற்ற உணர்வு யாதுமின்றி நேர்மையான முயற்சிகளை எடுத்து நாளுக்கு நாள், முன்னேறி புகழ், மகிழ்ச்சி இவற்றின் கொடுமுடியை அடைவோமாக.

(இருக் 10)

விழித்திரு, எழுந்திரு, தீர்மானம் கொள், உழை, உறுதியான கைகளில் உண்மையின் கொடி ஏந்தி மூன்னேறிடு. பாம்புகளைப் போன்று கொடிய, கெட்டெண்ணம் கொண்டவர்கள்களை வேரறுத்திடு. (இருக் 10)

த.கோ - தி.ழநீ