பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 琴* 246

காலைப்பொழுது உன் வாயிலைத் தட்டி உள் நுழைகிறது.
  1. .
  • .

岑*T

ஒ, தெய்வீகப் பண்புகள் கொண்ட மனிதர்களே, எழுமின், விழிமின், பெருமைவாய்ந்த கதிரவன் உதித்துவிட்டான். கிழக்கிலிருந்து, இருளின் கருமையைக் கிழித்து, வீறிடிடும் ஒளி மிதந்து வருகிறது. புதிதாகத் தோன்றிய பேரொளிக் கதிர்கள் நம்பிக்கையைப் புதுபிக்கின்றன. - * பேரார்வம் கொண்டு புதியதொரு நாள் பிறந்து விட்டது. வாழ்க்கை, புகழின் பாதையில் முன்னேறிச் செல்கிறது. ஒவ்வொரு விடியலும் புதியதொரு நம்பிக்கையையும், மகிழ்ச்சியான நாளையும் கொண்டு வருகின்றது.

(இருக் 10)

ஓ, உள்ளுயிரே, உனது, விரைவு புயலைப்போன்றும், பளபளப்பு பேரொளி வீசும் ஞாயிறு போன்றும் திகழட்டும். உனது ஒளியை எவரும் மிஞ்சிட இயலாது. உலகமனைத்தையும் ஒளி மணக்கச் செய்யும் வண்ணம் கோடி மின்னலாய் ஒளி வீசுக. (யசுர் 1)

தங்கள் தங்கள் தன் முயற்சிகளாலும் இறைவனருளாலும் அன்பர்கள் செல்வச் செழிப்பில் திளைக்கிறார்கள். ஆயினும் அவர்களுடைய செல்வச் செழிப்பிற்கு முதற் காரணம் அவர்களுடைய பொறுமையும், இடைவிடா உழைப்புமே. (இருக் 1)

நற்றமிழில் நால் வேதம்