பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261

உலகியலான பயன்களுக்காக அன்பு சார்ந்த இறை

வழிபாட்டை, கைவிடுபவர்கள் கவலையையும்,

ஏமாற்றத்தையும்தான் தேடிக் கொள்கிறார்கள்.

(அதர் 12)

உனது கட்டற்ற ஆசைகளை உறுதி கொண்டு வென்றி.டு. இவையே உனது எதிரிகள். (யசுர் 1)

கெட்ட எண்ணங்களை நெடுந்தொலைவு ஒதுக்கி வைத்திட எங்களுக்கு உதவிடுவாய், இறைவ.

(யசுர் 4)

ஏமாற்றுபவர்களை நசிக்கிடத் திண்ணிய உறுதிகொள். அல்லது தனது செய்கைகளினால் தன்னைத் தானே அரித் க் கொள்ள விட்டுவிடு. (யசுர் 8)

எளிய பொது மனித ஆசைகளுக்கு அப்பாற்பட்ட தெய்வீக ஆன்மிகப் பாதையில் அடி வைத்திடுவாய். நிலைத்த மகிழ்ச்சிக்கு வழி காட்டிடும் தெய்வீக ஒளியைக் காண்பாய். (யசுர் 8)

கடுமையான கட்டுப்பாடு, கண்டிப்பான நெறிமுறைகள் மூலம் கட்டுக் கடங்காத ஆசை உணர்ச்சிகளையும் பொசுக்கிவிடு. (சாம 24)

த.கோ - தி.பூரீ *}ళ్లt: