பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

279

விண்ணுலகும், மண்ணுலகும் வளிமண்டலத்தை அழுத்தி விடுகின்றன. 駕 இரண்டு கைகளும் எங்களுக்கு உரமளிக்கின்றன. * ஓ, இரட்டைத் தெய்வீக வலிமைகளே, உங்களை நோக்கி புறப்பட்டு வரும் எங்கள் பாடல்களை, கோடாலியைச் சாணைக்கல் கூராக்குவது போல, செழுமைப்படுத்துங்கள். (இருக் 2)

ஒ.இரட்டை தெய்வீக ஆற்றல்களே, உங்களை உயர்த்திப் புகழ்பாடும் இந்தப் புகழ்ப் பாடல்கள் பாவல்ல முனிவர்களால் செம்மைப்படுத்தப்பட்டவை. அவற்றினால் நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள். வீரர்களே, இங்கு வாருங்கள். அவையில் குழுமியிருக்கும் வீரர்களுடன் நாங்கள் உறுதியாகவே பேசுவோம்.

(இருக் 2)

இரண்டு படகுகள் போல, எங்களை அக்கரை சேர்த்திடுவீர். இரண்டு கழிகள் போல, ஆழியின் அச்சுகளைப்போல, எங்களைத் தூக்கிச் செல்க. எங்கள் உடலுக்கு எந்தத் துன்பமும் நேராதவாறு, இரண்டு நாயகனைப் போலக் காப்பாற்றுக. நாங்கள் கீழே விழுந்து விடாமலிருக்க இரண்டு ஊன்று கோல்களாயிருந்து எங்களைக் காப்பாற்றிடுக.

(இருக் 2)

த.கோ - தி.பூரீ *}ళ్లు)