பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

இரண்டு கலைமான் :ெ ம்புகள் போல எங்களிடம் இங்கே நெருங்கி வாருங்கள். விரைவான நடை கொண்டு வீறுடன் பறக்கும் இரண்டு குதிரைக் குளம்புகள் போல, காலைப் பொழுதில் வருகிற இரண்டு அன்றில் பறவைகள் போல, தேரில் வரும் இரண்டு திறன் வாய்ந்த போர்வீரர்களைப் போல எங்களிடம் நெருங்கி வாருங்கள். (இருக் 2)

சுழல்வீச்சு கொண்ட இரண்டு காற்றின் ஆற்றலைப்போல, ஒன்றிணையும் இரண்டு ஆறுகள் போல, விரைந்து உற்றுக் காணும் இரண்டு விழிகள் போல, எங்களிடம் நெருங்கி வாருங்கள். உடலுக்கு மிக்க உதவியாயிருக்கும் இரண்டு கைகள் போல, நெருங்கி வாருங்கள். இரண்டு கால்கள் போல, எங்கள் நல் வாழ்வுக்கு இட்டுச் செல்லுங்கள்.

(இருக் 2)

வாய் வழியே இனிமையாகப் பேசுகிற இரண்டு இதழ்கள் போல, நமக்கு உயிரூட்டும் கொங்கைகள் போல, நமக்கு உயிராற்றலளிக்கும் இரண்டு மூக்குத் துளைகள் போல, நன்கு கேட்கும் இரண்டு காதுகள்

  • போல, எங்களுடனேயே இருங்கள். (இருக் 2)

இ.

நற்றமிழில் நால் வேதம் سمسة