பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 స్కో உள்ளன அவளிடத்தில். n 駕

இயங்காத்திணை, இயங்குதினை யாவையும் அவளிடத்து வாழ்கின்றன. * தனது அறுவடைகளில் சிறந்தவற்றை அவள் எங்களுக்கு அளிப்பாளாக. (அதர் 12)

நானிலப் பகுதிகளுக்கும் மண்ணகமே தலைவி. உணவு, கூல வயல்கள் ஆகியவை உள்ளன அவளிடத்தில். உயிர்ப்பவையும், நகர்ந்து கொண்டிருப்பவையுமாக உள்ள வகை வகையான உயிரிளை அவள் உண்டாக்குகிறாள். ஆடு, மாடுகள், கூலம் ஆகியவற்றை அவள் எங்களுக்கு அளிப்பாளாக. (அதர் 12)

தாய் நிலத்தில் நமக்கு முன்னரே, மக்கள் வாழ்ந்ததுண்டு. பல வகையான வேலைகளையும் அவர்கள் செய்துள்ளனர். தீய ஆற்றல்களை வென்றிருக்கின்றனர். குதிரைகள் பறவைகள் ஆகியவற்றின் இருப்பிடமான தாய் நிலம் வாழ்வின் பொருளை நமக்குப் புரியவைத்து, அதற்கு ஒளியேற்றட்டும். புதையல் அடங்கிய, வாழ்விற்கு அடிப்படையாயிருந்து அதை நிலை நிறுத்துகிற இடங்களையும், பொன்னிறமான, வாழ்வு இயங்கிக் கொண்டிருக்கிற இருப்பிடத்தையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது தாய்நிலம்.

த.கோ - தி.பூரீ - *#ు