பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

331

இவ்வாறு ஒளியூட்டப்பட்டபின், நாம் அறநெறிகளை நிலைநாட்டுவோம். பேரண்ட ஆற்றல்களின் ஆதிமுதல் சிறப்புடைய பெருமை மிக்கது. (இருக் 3)

இந்த உலகத்தின் அரசன் பல இடங்களில் பிறந்தவன் படுக்கையில் படுத்துக்கொள்பவன், காடுகளில் பரந்து நிற்கிறான். என் தேவி குழந்தைகளுக்குப் பாலூட்டுகிறாள், இன்னொருத்தி அதை இளைப்பார விடுகிறாள். பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

(இருக் 3)

பழைய செடிகளில் பிழைப்பு நடத்துபவனே, புதியவற்றிலும் பிழைப்பு நடத்துகிறான். விரைவாகவே அவன் இளைஞர்களுள் ஒருவனாகப் பிறப்பெடுக்கிறான். தாமாகவே அவை மகப்பேறு எய்துகின்றன. பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

(இருத் 3)

இரு பேரன்னைகளுக்கு எங்கோ பிறந்த அவன் தனித்தவனாகத் தடையின்றிச் சென்று வருகிறான். ஞாயிறு பேராழி இவற்றின் சட்டமுறைகள் இவை. பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

(இருக் 3)

த.கோ - தி.யூரீ