பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

子・

jo

R

கடவுள் உறுதிபடக் கூறல்

எண்ணத்திற்கும் தெய்வீக ஒளிக்கும் நானே அடிப்படை எதிர்காலத்தைக் கண்டறியும் அறிவன் நான். கோள்களின் சுழற்சியின் போக்கில் r நான்தான் நடுநிலைப் புள்ளி. . கூர்மையான புத்தியை அளிப்பவனும் நானே. கடந்த காலமும் நான்தான், எல்லோருக்கும் நல்லதையே எண்ணுபவன் நான். - என்னை உற்று நோக்குங்கள். (இருக் 4)

உயர்ந்த உள்ளமுடையவர்களிடம் நான் உலகை ஒப்படைக்கிறேன். நிலத்தை உழுபவர்களுக்காக நான் மழை பொழிகின்றேன். சீறிவரும் தண்ணிருக்கு நான் வடிகால் அமைக்கிறேன். தெய்வீக ஆற்றல்கள் என் கட்டளைகளுக்கு அடி பணிகின்றன. (இருக் 4)

நற்றமிழில் நால் வேதம்