பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 ש"י என்னுடைய அடியார்களுக்கு 岑

அன்பு செலுத்தும் வகையில் o

தீயவர்களின் கோட்டை கொத்தளங்களை அழிக்கிறேன்.

தீய ஆற்றல்களை அழித்து என்னுடைய பற்றார்வங்களைக் காக்கிறேன். (இருக் 4)

நானே மன்னன், எல்லோரலும் மதிக்கப்படுபவன். தீய ஆற்றல்களை அழிவு செய்யும் வல்லமை அளிப்பது என்னைச் சார்ந்திருக்கிறது. தெய்வீக ஆற்றல்கள் என் சொற்படி நடக்கின்றன. நன்மதிப்புக்குரிய தலைவனாகிய நான் மட்டுமே மாந்தர்கள், அவர்களின் உற்றார் உறவினர்கள் யாவர் மேலும் ஆட்சி செலுத்துகிறேன். (இருக் 4)

ஒ, மனிதனே, உன்னுடைய மெலிந்த உடலையும், மனத்தையும் இரும்புக் கவசம் போன்ற என்னுடைய அன்பினாலும் ஆதரவினாலும் போர்த்துகிறேன். இந்தத் தெய்வீக அன்பு என்றும் நிலைத்திருக்கும் மகிழ்ச்சியை உனக்களிக்கட்டும். - o கருணையுள்ள இந்தப் புடவிக் காவலன், நீ வாழ்வதற்கான திடத்தை அளிக்கட்டும். வாழ்க்கைப் பயணத்தில் முன்னேற, உனக்கு அனைத்துத் தெய்வீக ஆற்றல்களும் கனிவு காட்டட்டும்.

(சாம 1870)

- த.கோ - தி.யூரீ