பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

ஆற்றல்கள் அளிக்கும் பலம், ஒளி, உயிர் இவற்றின் மையமானவன் நானே". (இருக் 10)

"வையகத்தின் தாய் நான்; செல்வமளிப்பவள் நான்; எவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டுமோ, எவற்றைச் சொல்லவேண்டுமோ, அவை யாவற்றையும் நான் அறிவேன். தெய்வீக ஆற்றல்கள் என் கட்டளைப்படிதான் இயங்குகின்றன. அனைத்து ஆள்நிலமும் என் ஆட்சியின் கீழ்தான் என்னைப் பற்றிப் போற்றியப் பாடல்கள் எல்லா இடங்களிலும் இசைக்கப்படுகின்றன.”

/ (இருக் 10)

"அறிவார்ந்த மக்களே, எனது ஆற்றலினால்தான் அனைத்து உயிர்களும் மூச்சு விடுகின்றன; உண்கின்றன; பார்க்கின்றன, கேட்கின்றன. அவை அறியாவிட்டாலும் கூட என்னுடைய பற்றும் பிணைப்பில்தான் அவை வாழ்கின்றன. அவற்றில் நான் உள்ளேன், என்னில் அவை உள்ளன.' (இருக் 10)

தெய்வீகத் தன்மை பெற்றவருக்கும், மனிதர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் சொற்களையே நான் பேசுகிறேன். என் மனத்துக்குகந்த மனிதர்களுக்கே நான் - திறமைகளை அளிக்கிறேன். அவர்களை நான் தெய்வீகத் தன்மை பொருந்தியவர்களாகவும், அறிவர்களாகவும் , முழுமை பெற்றவர்களாகவும் மாற்றுகிறேன். (இருக் 10)

த.கோ - திரு.

p