பக்கம்:நற்றிணை-2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t | நற்றின தெளிவுரை 157 நெஞ்சத்தையே 5®ಹಿಹಆpತ செய்யும் தன்மையாகின்றதே! இதுதான் எவ்வாறு இனி முடியுமோ தோழி? சொற்பொருள் : மெய் பரந்து-மெய்யினிடத்தே பரவி. எவ்வம்-துன்பம். வெம்மை-விருப்பம். அறியாது-உண்மை அறியாது. நம்வயின்அறியாது-நம்மிடத்தே வினவி உண்மை அறியாது எனலும் ஆம். அயர்ந்த-வெறியயர்ந்த. அயர்ந்த அன்னை-வருந்தித் தளர்ந்த அன்னையும் ஆம். வெறி-வெறி யாட்டு. வண்ணம்-நிறம். இது முகத்தில் தோன்றும் புள்ளி களால் உண்டாவது, அண்ணல்.தலைமைப்பாடு. பெரிய பண்பு-சால்பு; இது முன்பு செய்த தலையளியை நினைந்து கூறியது. | - விளக்கம்: அவன் நமக்குச் செய்த தலையளி எல்லாம் இதுபோது எவ்வங்கூர்ந்த ஏமுறு துயரமாகவே விளைந்தது என்றனள். இஃது அவன் வரைந்து கொண்டு இல்லறம் இயற்றுங் கருத்திலகைக் களவு உறவிலேயே நீடித்த விருப் பினகை விளங்கியமையை நினைந்து வருந்திக் கூறியதாகும். 'வெம்மையில் தான் வருத்துறிஇ என்றது, அன்னை நம் துயரத்தைக் கண்டதும் நம்பாலுள்ள அன்பினலே வருத்த மடைந்தனள். அவன் அன்பிலளுதலின் அதனைக் குறித்து ஏதும் கருதிற்றிலன் என்றதாம். அயர்ந்த அன்னை இது எதல்ை உற்றதென அறியாளாக மயங்கித் தளர்ந்த அன்னை என்றதாம். வெறியென வேலன் உரைக்கும் என்ப" என்றது, முருகே அணங்கிற்று; வெறியாடி முருகை வழி படுக’ என்பான் வேலன் என்று சொல்லுவார்கள் என்றது, பிறர் உரைப்பதைக் கேட்டுக் கூறியதாம். ‘அமைந்து வார்ந்து உறைந்து ஏன் கண்போல் நீலம் தண்கமழ் சிறக்கும்’ என, நீலத்தின் செறிவை உரைத்ததாக வும் கொள்ளலாம். பண்பு படர் தருவதன்று எனினும், அதுதான் இதுபோது படர்தருகின்றதே, இதுதான் இனி என்னவாக முடியுமோ என்பதுமாம். 'யானை நீர் கொள்ளும் தண்சுனையிடத்து நீலம் தண் கமழ் சிறக்கும் என்றது, தலைவன் தலைவியைக் கொள்ளக் கருதித் தலைவியின் மனையிடத்து வேட்டுவருங் காலத்தே, அவளது இல்லத்தாரும் மகிழ்ச்சியடைவார்கள் என்பதாம். "என்னவாகுமோ? என்று கவலையுற்றது, தலைவியின் களவுக் காதல் உறவினைக் கருதியாகும், | | | |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/161&oldid=774158" இலிருந்து மீள்விக்கப்பட்டது