பக்கம்:நற்றிணை-2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 163 கண்ணது எம் ஊர். நீர்தான் இப்போதே திரும்பிச் செல் லாது எம்மூர்க்கண் தங்கியிருந்துவிட்டுச் செல்வீராக, பெரிய மலையிடித்தே தோன்றி வளைந்த மூங்கிற் குப்பி களிலே நிரப்பி முற்றவைத்துள்ள நறவினை உண்டுவிட்டு, வேங்கை மரம் நிற்கும் முற்றத்திலே யாமாடும் குரவைக் கூத்தையும் கண்டுவிட்டுப் போவீராக! சொற்பொருளும் விளக்கமும் கோடு - கொம்பு. துவையா - ஊதியபடி. கோள் வாய் கொள்ளுதல் வல்ல வாய். வேட்டை நாய்கள் பிற விலங்குகளைத் தம் வாயாற் பற்றிக் கொள்ளும் தன்மையன என்பதல்ை, கோள்_வாய் நாய்' என்றனர். தேர்தல் - ஆராய்தல்; இது தமக்கேற்ற இரை யாதெனவும், எங்குள்ளது எனவும் சுற்றித் தேடித்திரிதல். வயமான் - வலிய விலங்கு. இது புலி முதலியவற்றைக் குறிப்பது. வேட்கும் - வேட்டையாட விரும்பும். வயவர் - வலிமையாளர்; வேட்டுவர். கொடிச்சி - குறக்குலப் பெண் ணின் பெயர். சேளுேன் - இதனத்து உள்ளோன்; இதணம் என்பது புனங்காவலுக்குக் கட்டியுள்ள உயரமான பரண்; இதன் மேலிருந்தபடி குறவன் இரவிலே புனத்தைக் காத்திருப்பான் என்பதாம். கழுது - பரண். கட்சி - ஒதுக் டம். சேக்கும் . தங்கும். செல்லாது - நின் ஊருக்குப் போகாது. வாங்குதல் - வளைதல். பழுனிய நறவு - முதிர வைத்த கள். முன்றில் - முற்றம். • 'ஒவ்வொரு சமயம் வந்து இவளைத் தழுவிச் செல்கின் ருய். எனினும் இவளோ நின் சிறுசிறு பிரிவையும் பொறுக்க லாற்ருது நலிகின்ருள். எனவே இன்றிரவுக்கு எம்மூரிடத்தே தங்கிச் செல்வாயாக' என்கின்ருள் தோழி. அதல்ை இடை யூறு உண்டாகாது எனவும், தன்னவர் விருந்தின்ர்ப்ப்ேனும் மரபினர் எனவும் கூறுவாள், நறவுண்டு; குரவையுங் கண்டு செல்வாயாக’ என்கின்றனள். இவ்வாறு தலைவன் வந்து, தலைவியின் பெற்ருேர் உபசரிக்கத் தலைவியின் விட்டில் இரவில் தங்குவது என்பது தலைவியை வரைந்து கொண்டன்றி இயலாது ஆதலின், களவுக்குறி மறுத்து வரைவு கேட்டனளும் ஆம். ‘யாம் வயவர் மகளிர் அல்லேம் குறவர் மகளிரேம்' என்றது, எம்மவர் நீ வரைந்துவரின் அதனை ஏற்றுக் கொள்ளும் தன்மையர் என்ற தாம். குறவர் மகளிரேம்' என்றதுடன், குன்று கெழு கொடிச்சியேம்' எனவும் கூறியது, அதனை மேலும் வலியுறுத்துவதற்காம், - |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/167&oldid=774164" இலிருந்து மீள்விக்கப்பட்டது