பக்கம்:நற்றிணை-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t ! " هم நற்றிணை தெளிவுரை A. 183 வதற்குப் பொருளின்மிகுதி இன்றியமையாமை சுட்டியது. "ஒட்டிய தோள்’ என்றது, தழுவிப் பிரியாதிருக்கும் தோள் என, அவர்கள் காதலன்பை வியந்ததாம். விளக்கம்: காதில் அணிந்துள்ள குழையின் அசைவை ஊசலின் அசைவுக்குப் பிறரும் ஒப்பிட்டுள்ளனர். பூங்குழை யூசற் பொறைசால் காதின்’ என்பது பொருநராற்றுப் படை (30). இழைமகள் பொன்செய் காசின் ஒண்பழம் த்ாஅம் குமிழ் என்று நற்றிணை 274ஆவது செய்யுளுள்ளும் கூறப்படும். இதனைக் கருதி ஊசல் ஒண்குழைக் காசு வாய்த் தன்ன” எனப் பாடங் கொள்வாரும் உளர். மேற்கோள்: 'நட்டோராக்கம் வேண்டியும் ஒட்டிய நின் தோள் அணிபெற வாதற்கும் அன்ருே தோழி அவர் சென்ற திறமே என்பதனை, மேவிய சிறப்பின் ஏனேர் படிமைய’ என்னும் சூத்திர உரையிற் காட்டி, 'அணியென்பது பூணின’ என்பர் நச்சினர்க்கினியர் (தொல். பொருள். சூ. 28 உரை). 287. கொடுங்கழிப் பாசடை நெய்தல் ! - பரடியவர்: உலோச்சனர். திணை: நெய்தல். துறை: காப்பு மிகுதிக்கண் ஆற்குளாகிய தலைமகள் சொல்லியது. ((து.வி.) தலைவியின் களவு உறவை ஐயுற்ற தல்ை அவளை இல்லிற் சிறையிட்டுக் காத்து வந்தனர். அவள் நெஞ்சம் அதஞ்ற் பெரிதும் நோகின்றது. அதனைத் தன் தோழிக்குக் கூறுவது போல அமைந்த செய்யுள் இது.) விசும்புறழ் புரிசை வெம்ப முற்றிப் பைங்கண் யானை வேந்துபுறத் திறுத்த நல்லெயில் உடையோர் உடையம் என்னும் பெருந்தகை மறவன் போலக் கொடுங்கழிப் பாசடை நெய்தல் பனிநீர்ச் சேர்ப்பன் 5 காம முதலை நடுங்குபகை அஞ்சான் காமம் பெருமையின் வந்தtஞான்றை அருகா தாகி யவன்கண் கெஞ்சம் கள்ளென் கங்குற் புள்ளொலி கேட்டொறும் . தேர்மணித் தெள்ளிசை கொல்லென 10 ஊர்மடி கங்குலும் துயில்மறந்ததுவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/187&oldid=774186" இலிருந்து மீள்விக்கப்பட்டது