பக்கம்:நற்றிணை-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

۹ز: .* , F- ΚΑ h 'β s } \, நற்றிணை தெளிவுரை 213 விளக்கம் : வருத்தந்தரும் கொடிய பாலையையும் பொருளார்வத்தால் கடந்து சென்றவரான நம் காதலர், இதுகாலை வழியும் கவின்பெற்றுக் கடத்தற்கு இனிதான போதும், நம்மை நிலையாமையால் அல்லவோ சொல்லிச் சென்றபடி திரும்பி வந்திலர் என்று நோகின்றனள். தெறுழம் பூக்கள் உதிர்தலால் கரிய புதர் வெண்ணிறம் பெற்று அழகி தாகத் தோன்றுமாறு போல, அவர் வந்து தலையளி செய்தன ராயின், தானும் துயர் நீங்கி அழகுபெறுவதையும் நுட்பமாகக் கூறுகின்றனள். . . . 303. எறி சுறவின் கடு முரண்! பாடியவர்: மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரிச் சாத்தனர். திணை : நெய்தல். துறை : 1. வேட்கை தாங்க கில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது: 2. சிறைப் புறத்தான் என்பது மலிந்தது உம் ஆம். ((து-வி.) 1. தான் கொண்ட காமவேட்கை தாங்க முடியாதவளான தலைமகள் தோழிக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது, 2. தலைவன் சிறைப்புறத்தாகை, தோழி, அவன்பால் தலைவியை விரைய வரைந்து வருதலைப் பற்றிய நினைவை எழச் செய்யக் கருதிக் கூறியதாகவும் கொள்ளலாம்.) ஒலியவிந் தடங்கி யாமம் கன்ளெனக் கலிகெழு பாக்கம் துயின்மடிங் தன்றே தொன்றுறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பைத் துணைபுணர் அன்றில் உயவுக்குரல் கேட்டொறும் 5 துஞ்சாக் கண்ணள் துயரடச் சாஅய் நம்வயின் வருந்தும் கன்னுதல் என்பது உண்டுகொல்-வாழி தோழி-தெண்கடல் வன்கைப் பரதவர் இட்ட செங்கோல் கொடுமுடி அவ்வலை பரியப் போகிக் 10 கடுமுரண் எறிசுரு வழங்கும் நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத் தானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/217&oldid=774219" இலிருந்து மீள்விக்கப்பட்டது