பக்கம்:நற்றிணை-2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ప్wwణాnు مهده حالهده دهـ 258 *******...,ಕ್ಷ್ಣ Q5ala690 I I باعطاكينهاكهة களிக்கும் என்றதாம். இது தந்தை வீட்டு வளநிலை சுட்டிக் கூறியதாகும். wo பயன் : ஊர் அலர் பெரிதாயினதால் அவனுடன் மகிழ் தலை இழந்தேம் என்று குறிப்பாகக் கூறி, அவன் உள்ளத்தை மணவினையிற் செலுத்தி விடுகின்ருள் தோழி என்பதாம். 324. நொந்து அழி அவலம்! பாடியவர் : கயமனர். திணை : குறிஞ்சி. துறை : 1. தலை மகன் பாங்கற்குச் சொல்லியது. 2. இடைச் சுரத்துக் கண்டோர் சொல்லியதுமாகும். ((து-வி.) 1. தலைமகன், தன் பாங்கனுக்குத் தன் தலைவி யைப்பற்றி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது: 2. இடைச் சுரத்தே உடன்போக்கிற் சென்ருளைக் கண்டோர் சொல்லியதும் ஆம்.) - அந்தோ தானே அளியள் தாயே கொந்தழி அவலமொடு என்ஆ குவள்கொல் பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள் - கோடுமுற்று யானை காடுடன் கிறைதர செய்பட் டன்ன நோன்காழ் எஃகின் 5 செல்வத் தந்தை இடனுடை வரைப்பின் ஆடுபந்து உருட்டுகள் போல ஓடி அஞ்சில் ஒதி இவளுறும் பஞ்சி மெல்லடி நடைபயிற் றும்மே. தெளிவுரை : பொன்னைப் போல ஒளிறும் மேனியை உடையவளான தன் மகளாகிய இவளை, இவள் தாய் மிகவும் விரும்பிப் போற்றுபவள். அதனல், அவள்தான், அந்தோ, தானே மிகவும் இரங்கத் தக்கவள் ஆவாள். அவள்தான் நொந்து அழிகின்ற துயரத்துடனே இனி எவ்வண்ணமாக ஆகுவாளோ? தந்தங்கள் முற்றிய யானைகள் தனது காட்டி னிடத்தே நிறையாக வந்து சேர்ந்தன. அதனுலே நெய்யைப் பூசிற்ைபோல விளங்கும் வலிய காம்பையுடைய வேற்படை யினையுடைய செல்வனகிய தந்தையது, அகற்சியையுடைய மலைப்பகுதியிலே, தான் ஆடுகின்ற பந்தினை உருட்டுபவளைப் போல ஒடியோடி, அழகிய சிலவாகிய கூந்தலையுடையவளான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/262&oldid=774269" இலிருந்து மீள்விக்கப்பட்டது