பக்கம்:நற்றிணை-2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை - 259 இவள் மிக்க பஞ்சுபோன்ற மெல்லடிகள், நடை பயிற்ரு நிற்குமே! - கருத்து: "இத்தகு இளமையோள் எவ்வாறு என்னை ரும்பி உடன் வந்தனளோ அதுதான் ஊழ் கூட்டியது' என்பதாம். - - சொற்பொருள் : அளியள் . அளிக்கத் தகுந்தவள்: இரக்கத் திற்கு உரியவள். நொந்து அழி அவலம் - மனம் நொந்து நொந்து அதல்ை உடல் நலமும் அழிபாட்டை உறுகின்றதான மனத்துயரம். பொன்போல் மேனி - பொன்னிறம் பெற்ற மேனி; இது மேனியின் வனப்பை உரைத்தது. நெய்பட்டன்ன . நெய் பூசிற்ை போலத் தோன்றும்; சாணையின் மெருகால் அவ்வாறு ஒளியைச் செய்யும். நோன்மை - வலிமை. செல்வத் தந்தை - செல்வகிைய தந்தை; இது அவள் வளர்ந்த செல்வச் செழுமை கருதியது ஆம். வரைப்பின் - வரைப் பக்கத்தில். பஞ்சி - பஞ்சு. நடைபயிற்றல் - சென்றும் மீளத் திரும்பியுமாக நடந்துகொண்டிருத்தல். விளக்கம் : என் காதலியது தன்மை இத்தகையது ஆதலின், அவளை யான் விரும்பியது என் தகுதிக்கு ஏற்புடை யதே என்று கூறுகின்ருன் 'தலைவன். காட்டினிடத்தே யானை நிறை புகுந்ததாதலின் அப்பகுதியில் விளையாடும் இவள் அவற் ருல் துன்புறுவளோ என்று அஞ்சியதாம். அதற்கு அஞ்சாது பந்தாடலிலேயே கவனமாகவிருக்கும் விளையாட்டுப் பருவத் தாள் அவள் என்பதுமாம். இரண்டாம் துறைக்குப் 'பொன் போன்ற மேனி வருந்துமே என்று அன்னை வருந்துவள் ஆதலின் என்னகுவளோ!' என்று உரைக்கவும். செல்வத் தந்தையின் புதல்வியாவாள், இவ்வாறு ஏதுமற்ருள் போல ஒடுவதேனே என்று இரங்கி, அந்தோ என்று கண்டார் உரைத்தனர் என்று கொள்ளுக. காட்டு வழியிற் பரற்கற்களில் இவள் எவ்வாறு நடந்து செல்வாளோவென்று இரங்குவார், பஞ்சின் மெல்லடி என்று கூறி வருந்தினர் என்க. - உடன்போக்கிற் செல்லும் தலைவி, நடை மெலிதல் வருத்தம் ஏதுமின்றிச் சென்ற செவ்வியை, 'ஒடுபந்து உருட்டு நள்போல ஒடி, அஞ்சில் ஒதி இவளும், பஞ்சி மெல்லடி நடை பயிற்றும்மே” என வியந்து கூறினர் என்றும் கொள்க. - அவள் தந்தை வீரமறக் குடியினன் என்பதனை நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின் செல்வத் தந்தை' என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/263&oldid=774270" இலிருந்து மீள்விக்கப்பட்டது