பக்கம்:நற்றிணை-2.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை . 347 அரிசியாற் சமைத்த வெண்சோற்றுத் திரளையை, அச்சமுடைய தெய்வத்திற்கு இடப்பெற்ற பலியோடு கவர்ந்து கொள்ளும் படியாக, குறிய கால் நாட்டிக் கட்டிய சோறுாட்டும் இடங்களையுடைய நல்ல மனையினிடத்தே கூட்டமாக அமர்ந் திருக்கும், பழமையான வீடுகளையுடையது அருமன் என்பானின் பெரும் புகழ்பெற்ற சிறுகுடி என்னும் ஊர். அவ்வூரைப் போன்ற மென்மையான சாயலையுடைய அரிவையே! நின்னுட்ைய பலவான கரிய கூந்தலிலே சூடிய மாலைபோல, குவளையோடு கலந்து தொடுத்த நறிய முல்லைப்பூவின், கட்டு அவிழும் மலராலாகிய குளிர்ந்த மாலைகளைச் சூடியவராக, நம் தலைவ்னுடன் சென்றிருந்த வீர்ர்கள் திரும்பி வந்து விட்டனர். நம் காதலரும், விரிந்த பிடரிமயிரையுடைய நல்ல குதிரையைச் செலுத்திக்கொண்டு, இடையில் எங்கும் தங்கி வருந்தாது. இப் பனிகொட்டும் நாளிலேயே வந்துவிடுவார்; ஆதலின், நீயும் வருந்தாதிருப்பாயாக என்பதாம். கருத்து : நம் தலைவர் இன்றே வருவர்; நின் ஏக்கமும் தீரும் என்பதாம். - சொற்பொருள் : கொடுங்கண் - வளைந்து ஒரு பக்கமாகப் பார்க்கும் கண். பேடை - பெட்டை. நடுங்குசிறைப் பிள்ளை . நடுங்கும் சிறகையுடைய தாக்கைக் குஞ்சு நடுங்குவது குளிரால் என்று கொள்க. பயிர்ந்து - அழைத்துக் கூப்பிட்டு. கருனை - கருணைக்கிழங்குப் பொறிக்கறி. குருடைப் பலி - அச்சத்தை யுடைய தெய்வத்திற்கு இடப்பெற்ற பலிச்சோறு. குறுங்கால் - குறுகிய கால்கள் கொண்ட பந்தர். கூழ் - உணவு. மூதில் . பழைமையான வீடுகள்; இது ஊரின் பழமையைக் குறிப்பது. 'பல்லிருங் கதுப்பு-பலவாகப் பகுத்து முடிக்கும் கரிய கூந்தல். 'பல்லிருங் கதுப்பிற் குவளை எனக்கூட்டி, கதுப்பினைப்போன்ற கரிய குவளைமலர் என்றும் பொருள்கொள்ளலாம். கோதை - தலைமாலை. உழை - பிடரிமயிர். பரியாது - தங்கி வருந்தாது. விளக்கம் : மூதில் அருமனின் சிறுகுடியிலுள்ள பெண்கள் தாம் நேர்ந்து கொண்டபடி, தம் கணவர் வந்ததும், பலிச் சோறிட்டுக் காக்கையைப் போற்றினர் என்று கருதலாம். 'சிறுகுடி மெல்லியல்' என்றது, அச் சிறுகுடிபோன்ற மென்மைத் தன்மை கொண்ட பெண், தலைவி என்று கூறியதாம். குவளையும் முல்லையும் சேர்த்துக்கட்டிய மாலையானது, நீலமும் வெள்ளையும் விரவியதாக அழகுடன் விளங்குவதோடு, கார்காலத்தின் வரவையுணர்த்துவதும் ஆகும். இளைஞர் - போர் மறவர்; இதல்ை தலைவன் படைத்தலைவன் என்பதும் அறியப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/351&oldid=774466" இலிருந்து மீள்விக்கப்பட்டது