பக்கம்:நற்றிணை-2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- "مجها لم நற்றிணை தெளிவுரை ήσ ཨོཾ༽ ( 45 சான்று கூறிற்று என்பதும், அவனும் மனந்திருந்தி அவளே மணந்து வாழ்ந்தான் என்பதும் பழங்கதை. கேட்டோர் . கேட்டறிந்தவராகிய தலைவரும் பிற்ரும். விளக்கம்: தலைவன் தன் உறவை மறுப்பினும், தானும் திருமாவுண்ணி போலத் தங்கள் உறவை மெய்ப்பித்து அவனைப் பெறுவதற்கு மனவுறுதி கொண்டவள் என்கிருள் அவள். வேங்கைக் கடவுள் முருகனைக் குறிப்பதும் ஆகலாம். குறமகளிர் தம் காதலனேடு தம்மைச் சேர்ப் பிக்க முருகனை வேண்டிக் குரவையாடுதலைச் சிலம்பிற் கண்டு இன்புறுக. நாணுடைப் பெண்டிர் இவ்வாறு மன்றேறி வழக்குரைத்தல் வழக்கமில்லை. எனினும், அருகிய நிலையில் இவ்வாறுஞ் செய்து தம் கற்பறத்தைக் காத்தாரும் உளர் என்பதும் இதல்ை அறியப்படும். கண் பரத்தையாகவும், விழுமம் அவள் கொண்ட பிரிவுத் துயராகவும், கைபோல் உதவுங் கடப்பாட்டினன் தலைவன் எனவும் உவமங்களைப் பொருத்திக் காண்க. திருமாவுண்ணி கதை கண்ணகி கதையையே ஒத்திருத் தலைக் காண்க. 'குருகார் கழனியின் இதணத்து ஆங்கண் ஏதிலாளன் கவலை கவற்ற' என்பதற்கு, அதற்கேற்றவாறு கோவலனின் கொலை நிகழ்வைப் பொருத்திப் பொருள் கொள்ளுதல் பொருந்தும். "முலையறுத்தல்’ என்பது நகில் குறைத்தல் என்பதும், அது காமவின்ப நுகர்ச்சிக்கண் இன்புறுத்திய உறுப்புக் களின் ஒன்ருன முலைக்கண்களைத் தாம் பிரிவுத்துயரால் வெதும்பிய வெம்மையின் வேகத்தால் திருகி எறிதல் என்பதும் ஆய்வாளர் உறுதிப்படுத்திய செய்திகள். 217. விடுவேன் தோழி பாடியவர் : கபிலர். திணை : குறிஞ்சி. துறை : தலை மகன் வாயில் மறுத்தது. - ((து.வி.) பரத்தமை உறவிலே பிரிந்திருந்த தலைவன் மீண்டும் தன் வீட்டிற்கு வருகின்றன். தலைவியின் ஊடற் சினத்தைக் கண்டு, அவள் சினத்தைத் தணிவிக்குமாறு தோழியை விடுக்கின்ருன். தோழியும் தலைவிபாற் சென்று, தலைவ்னை மீளவும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்ருள். அவருக்குத் தலைவி சொல்வதுபோல அமைந்த உருக்கமான செய்யுள் இது.) • .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/49&oldid=774736" இலிருந்து மீள்விக்கப்பட்டது